கெப் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
களுதியகம, செவனகல பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சமல் சதுரங்க மற்றும் யாயகம, செவனகல பகுதியை சேர்ந்த கசுன் ஶ்ரீமால் எனும் 17 வயதுடைய நண்பர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.